
Sivanesathurai Chandrakanthan Facebook
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள், மாகாணசபை தேர்தல் உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விரைவில் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கூடுதலான நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார் எனவும் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், இனிவரும் காலங்களில் அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொள்ளவும், ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி குறைபாடுகள் இருந்தால் அவற்றை உடனுக்குடன் தீர்த்து கொள்ளவும் இதன்போது முடிவுகள் எட்டப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.