July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிடம் இருந்து ஒரு கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க இலங்கை ஒப்பந்தம்

இந்தியாவிடமிருந்து ஒரு கோடி அளவிலான கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை பெற புனே சீரம் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது.

இலங்கையில் 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 400-க்கு அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக இந்தியா வழங்கிய 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு இலங்கையில் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இந்த தடுப்பூசி திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள ஒரு கோடி கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை இந்தியாவிடம் இருந்து இலங்கை வாங்க திட்டமிட்டுள்ளது.