![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/covid19-vaccine.jpg?fit=1000%2C642&ssl=1)
இந்தியாவிடமிருந்து ஒரு கோடி அளவிலான கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை பெற புனே சீரம் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது.
இலங்கையில் 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 400-க்கு அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக இந்தியா வழங்கிய 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு இலங்கையில் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
இந்த தடுப்பூசி திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள ஒரு கோடி கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை இந்தியாவிடம் இருந்து இலங்கை வாங்க திட்டமிட்டுள்ளது.