February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மனித உரிமை மீறல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினராக யோகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணாந்து மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகிய மூவர் கொண்டமைந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த ஆணைக்குழுவில் இலங்கையின் பன்மைத்துவம் மற்றும் பாலின அடையாளத்தை பிரதிபலிக்க வேண்டிய அவசியத்தை கவனத்தில்கொண்டு, யோகேஸ்வரி பற்குணராசாவை நியமிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்ப்பாணம் மாநகரின் முன்னாள் முதல்வரும் ஆவார்.