May 28, 2025 20:08:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1406 பேர் கைதாகியுள்ளனர்!

இலங்கையின் மேல் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1406 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 681 பேரும், குற்றச் செயல்கள் தொடர்பாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த 44 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.