![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-22-at-6.14.20-PM.jpeg?fit=1024%2C576&ssl=1)
இலங்கையின் மேல் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1406 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 681 பேரும், குற்றச் செயல்கள் தொடர்பாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த 44 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.