June 13, 2025 11:52:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்றது.

”சுபீட்சமான எதிர்காலம்- சௌபாக்கியமான தாய் நாடு’ எனும் தொனிப்பொருளில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில் இம்முறை சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றியே, சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் ஆளுநர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் என 1800 பிரமுகர்கள் பங்கேற்றனர்.