June 13, 2025 23:08:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் யோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்  வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து யோஷித ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகப் பிரதானியான யோஷித ராஜபக்‌ஷ  தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில், வட- கிழக்கு ஒத்துழைப்பு மற்றும் சமூக- பொருளாதார முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.