July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாணவ சமுதாயத்தின் பலம் நிரூபிக்கப்பட்டுள்ளது’

மாணவ சமுதாயத்தின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைத் கூறியுள்ளார்.

மாணவ சமுதாயத்தின் பலம்  நிரூபிக்கப்பட்டுள்ளமையானது பலருக்கும் பாடம் புகட்டியுள்ளது. எமது ஒற்றுமையே எமக்குப் பலமாகும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் சுய தனிமைப்படுத்தலில் இருந்ததன் காரணமாக யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது தன்னால் வர முடியாமல் போனதையிட்டு மிகவும் வருந்துவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.