May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2022: சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக டோனி தக்கவைப்பு!

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக எம்.எஸ். டோனி தக்கவைக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 14 ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் 15 ஆவது ஐ.பி.எல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் பங்கேற்கின்றன. இதனால் மிகப்பெரிய அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக எம்.எஸ். டோனி தக்க வைக்கப்பட்டுள்ளார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு அணியும் 3 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். அதன்படி சென்னை அணியில் டோனி தக்கவைக்கப்பட்டதன் மூலம் அடுத்த ஆண்டும் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.