July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“சென்னையில் தான் எனது கடைசி ஐ.பி.எல் நடக்கும்”: டோனி

Photo: Twitter/IPL

சென்னை ரசிகர்கள் முன்னிலையில் தனது கடைசி ஐ.பி.எல் போட்டியை விளையாட விரும்புவதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ் டோனி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாகிய 2008 முதல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக எம்.எஸ் டோனி உள்ளார்.

கடந்த வருடம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, ஐ.பி.எல் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்தநிலையில், இந்த வருடத்துடன் ஐ.பி.எல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த வருட ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவதை டோனி உறுதி செய்துள்ளார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழா தொடர்பாக இணையவழி ஊடாக ரசிகர்களுடன் டோனி உரையாடினார்.

இதன்போது அவர் சென்னை ரசிகர்கள் முன்னிலையில், தனது கடைசி ஐ.பி.எல் போட்டி நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

”என்னுடைய கடைசி ஐ.பி.எல் போட்டியை நான் சென்னை அணிக்காக விளையாடுவதை ரசிகர்கள் நேரில் காணலாம். எனக்குப் பிரியாவிடை அளிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சென்னைக்கு நாங்கள் வருவோம். அங்கு என்னுடைய கடைசிப் போட்டியில் விளையாடுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, இந்த வருட ஐ.பி.எல் தொடருடன் டோனி ஓய்வு பெற்று விடுவாரா என ரசிகர்கள் சந்தேகத்துடன் இருந்த நிலையில், டோனியின் இந்த அறிவிப்பு சென்னை சுப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.