June 17, 2025 22:49:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியில் மேலும் ஐந்து வீரர்கள் இணைப்பு

இலங்கையின் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் அணியில் மேலதிக வீரர்களாக ஐந்து பேர் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, பெதும் நிஸ்ஸங்க, மினோத் பானுக்க, அஷேன் பண்டார, லக்‌ஷான் சந்தகன் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் இலங்கை அணியுடன் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமாகவுள்ளனர்.

இதற்கான அனுமதியை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ வளங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, முன்னதாக அறிவிக்கப்பட்ட இலங்கை டி-20 உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெற்ற சகலதுறை வீரர் லஹிரு மதுஷங்க தோள்பட்டை உபாதையினால் அவதிப்பட்டு வருவதால், 3 ஆம் திகதி ஓமான் நோக்கி பயணமாகும் இலங்கை கிரிக்கெட் அணியுடன் பயணிக்கமாட்டார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.