Photo: PCB Twitter
பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்தன.
இதில் இங்கிலாந்து ஆடவர் அணி ஒக்டோபர் 13 மற்றும் 14 ஆம் திகதி ராவல்பிண்டியில் இரண்டு டி- 20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மகளிர் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவிருந்தது.
ஏற்கெனவே, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி கடைசி நேரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி தொடரை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும், வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.