July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த யோசனை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஹம்பாந்தோட்டையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இரண்டு அணிகளும் ஐ.சி.சி.இன் ஒருநாள் சம்பியன் ஷிப்பிற்காக விளையாடவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், செப்டம்பர் மாத ஆரம்பம் தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த திட்டமிடப்பட்ட போதும் குறித்த காலப்பகுதியில் அங்கே இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரிமீயர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறவுள்ளன.

எனவே, குறித்த காலப்பகுதியில் பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரினை நடத்துவதற்கான மைதானம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இல்லாததன் காரணமாகவே இரு அணிகளும் பங்கு பெறும் ஒருநாள் தொடர் இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி ஹம்பந்தோட்டையில் பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் பங்கு பெறும் ஒருநாள் தொடர் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.