July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குஜராத் தீ விபத்தில் 18 கொரோனா நோயாளர்கள் பலி!

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள மருத்துவமனையொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 18 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாரூச் என்ற இடத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது நோயாளர்கள் பலர் படுக்கையில் இருந்தவாறே தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இதில் காயமடைந்த 50 அருகில் உள்ள மருத்துவமனையொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.