May 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திலீபனுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி நிகழ்வு

செப்டம்பர் 26ஆம் திகதி இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூரில் கொட்டும் மழையிலும் திலீபனுக்கு தமிழ் மக்கள் வணக்கம் செலுத்தினர்.

இதனையொட்டி பிரித்தானியாவின் தலைநகரிலும் அரசியல்.விழிப்புணர்வுப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானியாவில் Downing Street, London, SW1A 2AA என்னும் முகவரியிலமைந்துள்ள பிரதமர் செயலகம் முன்பாகக் காலை 11 மணிக்கு தொடங்கப்பட்ட விழிப்புணர்வுப் போராட்டமானது மாலை 5 மணி வரை நடைபெற்றது.

அங்கு திலிபனுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் பெருந்திரளாக திரண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், எழுச்சி உரைகளும் இடன்பெற்றன.