May 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி மீதான தாக்குதலை கண்டித்து பிரிட்டனில் போராட்டம்

பிரித்தானியாவில் வெளிவிவகார அமைச்சுச் செயலகத்திற்கு முன்பாக தமிழர்களால்  வியாழக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அநீதிகளை இழைப்பதாக குற்றம் சாட்டியுள்ள பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள், பிரித்தானிய அரசின் கவனத்திற்கு இவற்றை கொண்டுவரும் நோக்கிலேயே போராட்டம் நடாத்தப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசிய உணர்வை எந்த சக்திகளாலும் அடக்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் அவசியம் மற்றும் தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் தமிழ் மக்கள் என்றும் உறுதியாகப் பயணிப்பார்கள் என்ற செய்தியை பிரித்தானிய அரசிற்கும் உலகிற்கும் எடுத்துரைக்கும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளதாக பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

போராட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பினர், மக்களவை அமைப்பினர் ஆகியோர் ஆங்கில உரைகளை வழங்கியிருந்தார்கள்.

இதேவேளை திருகோணமலை பகுதியில் திலீபனின் உருவ படம் தாங்கிய ஊர்தியை அடித்து உடைத்தது, தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களையும் தாக்கியமைக்கு இந்த போராட்டத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு இதனைத் தெரியப்படுத்துவோம் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தெரிவித்தனர்.