February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னை அருகே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிப்பதால் வட தமிழகம் – தெற்கு ஆந்திரா கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேநேரம், மணித்தியாலத்திற்கு 65 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையிலும் பல இடங்களில் பலத்த மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.