July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் ‘கருப்பு பூஞ்சை’ நோயால் 3,300 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் 3 ஆயிரத்து 300 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சை நோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து மருத்துவமனைக்கு வந்தால் தேவையான சிகிச்சை வழங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிறப்பு வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நோய்க்கு சிகிச்சை அளிக்க கூடிய ஆம்போடெரிசின் மருந்து 59 ஆயிரம் வரையில் கையிருப்பில் இருப்பதாகவும் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3 ஆயிரத்து 300 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவில் இந்த கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.