June 1, 2025 23:20:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழக அரசு ராஜபக்‌ஷ அரசாங்கத்துடன் நட்புறவை வலுப்படுத்த வேண்டும்’: சுப்பிரமணியன் சுவாமி

தமிழக அரசு, இலங்கையின் ராஜபக்‌ஷ அரசாங்கத்துடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஸ்டாலினைத் தலைமையாகக்கொண்ட தமிழ் நாட்டு அரசாங்கம், இலங்கையின் ராஜபக்‌ஷ அரசாங்கத்துடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும், “இவை அனைத்துக்கும் அப்பால், பல திமுக தலைவர்களுக்கும் தென்னிலங்கையில் சொத்துகள் இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.