July 13, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள்”;கமல்ஹாசன் அறிவிப்பு

‘உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள்’ என அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சட்மன்ற தேர்தலின் தோல்விக்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர், துணைத்தலைவர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கட்சியிலிருந்து விலகிய நிலையில் தற்போது கமல்ஹாசன் வீடியோவொன்றை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்போது என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன் எனவும் அரசியல் இருக்கும் வரை- மக்கள் நீதி மய்யம் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப் பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம் எனவும் பொய் குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும்,

உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள் எனவும் கமல்ஹாசன் சூளுரைத்துள்ளார்.