July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக கர்நாடகா மாநிலத்தின் சாம்ராஜ் நகர மருத்துவமனையில் 24 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கர்நாடகா மாநில மருத்துவமனை ஒன்றில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக 24 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தின் சாம்ராஜ் நகர மருத்துவமனை ஒன்றில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களில் 12 பேர் கொரோனாவுக்கும் ஏனையோர் வேறு நோய்களுக்கும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அங்கு மருத்துவ ஒக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஒக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இவ்வாறான மரணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.