கொரோனா தடுப்பு பணி குறித்து உயர்மட்ட குழுவுடன் ஆலோசிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
மேற்கு வங்க பிரசார பயணத்தை ரத்து செய்வதாகவும் பிரதமர் அறிவித்திருக்கிறார்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி இந்த ஆலோசனையை நடத்த உள்ளார்.
உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு வியாழக்கிழமை 3.14 லட்சத்தை தாண்டியுள்ளது.
முன்னணி ஒக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பை தடுப்பது தொடர்பாக பிரதமர் மோடி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.