June 14, 2025 12:10:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 3 இலட்சத்தைத் தாண்டியது!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 இலட்சம் பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய கொரோனா நோயாளர்கள் தொகை இதுவாகும்.

கடந்த 24 மணிநேரத்தில் 315,802 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம், அங்கு நிலவும் ஒக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு நடுவே 2,102 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதுவே, ஒரே நாளில் பதிவான அதிகளவான மரணங்களும் ஆகும்.

கொரோனா தொற்றால் 184,672 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 23 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் முழு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா, கேரளா, கர்னாடகா, தமிழ் நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.