June 14, 2025 12:54:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘டெல்லியில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு முழு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படும்’: மாநில அரசு அறிவிப்பு

file photo: Twitter/ CMO Delhi

கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு தற்போது அமுலில் உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது பல மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்தில் ஞாயிறு முழுவதும் ஊரடங்கு என நேற்று அறிவிக்கப்பட்டது.

அதேபோல், இரவு நேர ஊரடங்கும் தமிழகத்தில் 20 திகதி முதல் அமுல்படுத்தப்படுகிறது.

தற்போது, டெல்லியிலும் ஒரு வாரம் முழு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் இன்று இரவு முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.