July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்!

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 20 ஆம் திகதி முதல் நாளாந்தம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை இரவு நேர ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றும் தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு அமுலில் இருக்கும்போது தனியார் பொது போக்குவரத்து ஆட்டோ, டெக்ஸி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டெக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுப் பரவல் நிலைமை காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.