July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் இருந்து கடல்வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த இளைஞர்கள் இருவர் கைது!

இலங்கையின் மன்னாரில் இருந்து கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் நுழைந்த இரண்டு இளைஞர்களை இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் க்யூ பிரிவு பொலிஸாரும், மத்திய பாதுகாப்பு வட்டார அதிகாரிகளும்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் குறித்த இளைஞர்கள் இருவரும் படகொன்றில் இருந்து இறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இருவரையும் கைது செய்துள்ள அதிகாரிகள் அவர்களை கடலோரக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  விசாரித்துள்ளனர்.

இதன்போது, தாம் மன்னார் அடம்பன் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஒருவர் வேலை வாங்கித் தருவதாக கூறிய தங்களை தமிழகத்திற்கு வரவழைத்தாகவும் அந்த இளைஞர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடலோர பொலிஸார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.