October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியீடு!

இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ‘வாடா தம்பி’ என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இளைஞர்களுக்கான ஒரு விழிப்புணர்வு பாடலாக இருப்பதுடன் தடைகளை தகர்த்து நாம் முன்னோக்கி எவ்வாறு செல்வது என இப்பாடலில் காட்டப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலுக்கான வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார்.

இது விக்னேஷ் சிவனின் இரண்டாவது பாடல் என கூறப்படுகிறது.

சமீபத்தில் வலிமை திரைப்படத்தில் அம்மா… என்ற பாடலை எழுதி இருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அப்பாடலுக்கு பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் பெயரும் கிடைத்தது.

ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் தற்போது பாடலாசிரியராகவும் உருவெடுத்துள்ள விக்னேஷ் சிவன், இமானின் இசையில் இந்தப் பாடலை பிரபல இசை அமைப்பாளர்கள் இருவர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் இருவரும் இணைந்து இந்த பாடலை போட்டி போட்டுக்கொண்டு பாடி இருப்பதை நாம் இந்த பாடலின் காட்சிகளில் காணமுடிகிறது.

அதேபோல் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த பிரபலங்களின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த பாடலை வைரலாக்கி வருகிறார்கள்.

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக, டாக்டர் படத்தில் அறிமுகமான பிரியங்கா அருள் மோகன் இணைந்து நடிக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெப்ரவரி 4 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது

கொரோனா ஆரம்ப காலகட்டம் முதல் தற்போது வரை நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த படங்கள் அனைத்துமே ஓடிடி தளங்களில் தான் வெளியாகியது.

இந்நிலையில் இந்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழ், மலையாளம் ,தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.