June 1, 2025 20:04:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ருமேனியாவில் கொரோனா வைரஸ் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி

ருமேனியாவில் அமைந்துள்ள பியட்ரா நீம்ட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை,7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில், ஒரு நபரைத் தவிர,மரணமானவர்கள் மற்றும் காயமடைந்த அனைவரும் கொவிட் -19 நோயாளிகள் என்று அவசர சேவை செய்தித் தொடர்பாளர் இரினா போபா தெரிவித்துள்ளார்.

இந்த தீ பரவல், ஒரு குறுகிய சுற்று மூலம் தூண்டப்பட்டிருக்கலாம் என்று ருமேனியாவின் சுகாதார அமைச்சர் நெலு டட்டரு தெரிவித்துள்ளார்.