![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/dfrdfr.jpg?fit=499%2C279&ssl=1)
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள வாக்கு எண்ணும் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் சென்ற நபரை சுற்றி வளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பென்சில்வேனியா மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான பிலடெல்பியாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு சிலர் காரில் துப்பாக்கிகளுடன் வர்ஜினியாவிலிருந்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சந்தேகத்திற்குரிய வகையில் வந்த ஹம்மர் காரை சுற்றி வளைத்த பொலிஸார், சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, காருக்குள் துப்பாக்கிகள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரையும், ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் யாருடைய ஆதரவாளர் என தெரியவில்லை.
பிலடெல்பியாவில் உள்ள வாக்குகள் எண்ணப்படும் நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதித்திட்டம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலடெல்பியாவில் வாக்குகள் தொடர்ந்தும் எண்ணப்பட்டுவரும் நிலையில் அங்கு டிரம்பினதும் பைடனினதும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.