![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/bidan-1.jpg?fit=1000%2C665&ssl=1)
தேர்தல் முடிவுகள் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜோ பைடனின் பிரசார முகாமையாளர் ஜென் ஓ மலி டிலான், ஆதரவாளர்களை பொறுமையை கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய கதை ஜோ பைடனிற்கு சாதகமாக அமையப்போகின்றது என தெரிவித்துள்ள அவர்,மக்கள் பொறுமையாக, அமைதியாக
இருக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்படுகின்றன. அது சிறப்பாக நடைபெறுவதற்கு நாங்கள் அனுமதிக்கவேண்டும்.வாக்குகள் எண்ணப்படுவது எப்படி அமைந்தாலும் எவ்வளவு நேரமானாலும் நாங்கள் வெற்றிபெறுவோம் என்பது குறித்து நம்பிக்கையுடன் இருக்கின்றோம். ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என்பது குறித்து முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.