![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/84170855_10156616609286104_3856705985552842752_n-e1604531637955.jpg?fit=960%2C643&ssl=1)
‘வெற்றி தெளிவாகிவிட்டது’ என ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் இணைந்து அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
‘நாம் வெற்றி பெறுவோம் என்பது தெளிவாகிவிட்டது’ என்று தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பைடன் தெரிவித்தார்.
“நான் வெற்றிபெற்றதாக அறிவிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. ஆனால் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டதும் நாங்கள் வெற்றிபெறுவோம் என நம்புகின்றோம்” என பைடன் தெரிவித்தார்.
அனைத்து வாக்குளையும் எண்ணவேண்டும் என தெரிவித்துள்ள பைடன், ‘எங்களிடமிருந்து எவரும் ஜனநாயகத்தினை பறிக்க முடியாது’ எனவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாக விளங்கப்போவதாக தெரிவித்துள்ள பைடன், “நான் வெற்றிபெற்றதும் சிவப்பு மாநிலங்கள்- நீல மாநிலங்கள் என்ற வித்தியாசங்கள் இருக்காது. அமெரிக்கா மாத்திரமே இருக்கும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.