May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடுக்குமாடி குடியிருப்பில் தீ – 63 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சம்பவம்!

தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் மேலும் 40 பேர் எரிகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஐந்து மாடிகளை கொண்ட குடியிருப்பு தொகுதியொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதில் கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு தீயில் சிக்கியுள்ள பலரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்தும் அங்கு மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்டிடத்தில் தீ பரவியுள்ள நிலையில் தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜோகன்னஸ்பர்க் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.