June 11, 2025 18:22:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கானுக்கு பிணை!

தோஷகானா ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இம்ரான் கான் பிரதமராக இருந்த காலப்பகுதியில் மேற்கொண்டதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான தோஷகானா வழக்கு தீர்ப்பு ஆகஸ்ட் 5 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட போது அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 வருட சிறைத் தண்டனையை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.

இதனை எதிர்த்து இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

இவரின் மேன்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.