October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி!

பாகிஸ்தானின் பெஷவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில், ஏராளமானோர் கலந்துகொண்டிருந்த வேளையிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் பலர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு பாதுகாப்பும் அதிகாரிக்கப்பட்டுள்ளது.