June 14, 2025 13:51:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

படகு தீ பிடித்ததில் 150 குடியேற்றவாசிகள் பலி; செனெகல் கடற்பகுதியில் துயரம்

செனெகல் கடற்பகுதியில் அகதிகள் படகொன்று தீ பிடித்ததில் 150 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளே இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்துள்ளனர்.

தீப்பிடித்த படகில் 200க்கும் அதிகமானவர்கள் இருந்துள்ளனர் எனவும் அவர்களில் சுமார் 60 பேரை மீட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செனெகலின் வடமேற்கு செயின் லூயிஸ் கடற்பகுதியிலிருந்து புறப்பட்ட படகே விபத்தில் சிக்கியுள்ளது.

ஸ்பெயின் கனரி தீவின் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயன்றவர்களே பலியாகியுள்ளனர்.இந்த வருடம் இடம்பெற்ற மிக மோசமான சம்பவம் இது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.