![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2022/01/123.jpg?fit=774%2C405&ssl=1)
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
19 மாடிகளை கொண்ட கட்டடத்திலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக நியூயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த கட்டடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ள நிலையில் இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்த சில நிமிடங்களில் 200க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் கரும்புகை அதிக அளவில் இருந்ததாலும் தீயை அணைப்பது சிரமமாக இருந்துள்ளது. கடும் போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
எனினும் இந்த சம்பவத்தில் 9 சிறுவர்கள் உட்பட 19 பேர் தீயில் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 32 பேர் எரிகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் பிலடெல்பியாவில் மாடிக் குடியிருப்பொன்றில் நடந்த தீ விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.