July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷில் பயணிகள் படகொன்றில் தீ விபத்து: பலர் மரணம்!

பங்களாதேஷ், ஜகாகாதியில் பயணிகள் படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டாக்காவில் இருந்து 250 கிலோ மீற்றர் தூரத்தில் ஜகாகதி பகுதியில் நடு ஆற்றில் ‘ஓபிஜான் 10’ என்கிற மூன்றடுக்கு படகிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது தீயில் சிக்கியும், ஆற்றில் மூழ்கியும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புக் குழுவினர் குறித்தப் பகுதியில் மீட்பு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.