![Earth Quake common Images](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/EarthQuake-.jpg?fit=1024%2C576&ssl=1)
இந்தோனேசியாவுக்கு கிழக்கே ப்ளோர்ஸ் தீவுப்பகுதியில் 7.5 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
கடலுக்கு அடியில் 100 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தேனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இதனால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.