![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/12/264305241_10160275303249311_8765597355019704865_n-e1638962076946.jpg?fit=477%2C352&ssl=1)
ஜெர்மனியின் புதிய சான்ஸ்சலராக சோசியல் டெமொக்ரட்ஸ் கட்சியின் தலைவர் ஓலப் ஸ்கோல்ஸ் பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் கடந்த 16 வருடங்களாக பதவி வகித்த எஞ்சலா மெர்கலின் ஆட்சி நிறைவுக்கு வருகிறது.
ஜெர்மனி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த சான்ஸ்சலருக்கான வாக்களிப்பில், ஓலபின் கூட்டணி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் எஞ்சலா மெர்கல் ஆதரித்த கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர்மின் லஷெட் தோல்வியைத் தழுவினார்.
இந்த ஆட்சி மாற்றத்துடன் எஞ்சலா மெர்கலின் 31 வருட அரசியல் வாழ்க்கையும் நிறைவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.