July 1, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தோனேசியாவின் செமேரு எரிமலை சீற்றம் – 13 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலையிலிருந்து வெளியேறிய புகை காரணமாக 57 பேர் வரை காயம் அடைந்துள்ளதாகவும் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

செமேரு எரிமலை சனிக்கிழமை குமுறத் தொடங்கியது முதல் அங்கிருந்து மக்கள் வெளியேற ஆரம்பித்தனர்.

ஆகாயத்தில் 15 ஆயிரம் மீட்டர் வரை புகை மண்டலம் ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீவில் உள்ள முழு கிராமங்களில் உள்ள வீடுகளின் கூரைகள் எரிமலை சாம்பலில் புதைந்து கிடப்பதை படங்கள் காட்டுகின்றன.

மேலும் அடர்த்தியான புகை சூரிய கதிர்களை தடுப்பதன் காரணமாக தாம் இருளில் இருப்பதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த எரிமலை சீற்றம் காரணமாக குறைந்தது 11 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில கிராமங்களில் வசிப்பவர்கள் மசூதிகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.