July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆஸ்திரியாவின் புதிய சான்சிலர் ஷேலன்பெர்க் பதவி விலகினார்!

ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, ஆஸ்திரியாவின் புதிய சான்சிலர் அலெக்சாண்டா் ஷேலன்பெர்க் பதவி விலகியுள்ளார்.

முன்னாள் சான்சிலர் செபாஸ்டியன் குர்ஸ் இராஜிநாமாவைத் தொடா்ந்து, அப்போது வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த அலெக்சாண்டா் ஷேலன்பெர்க், புதிய சான்சிலர் பதவியேற்றாா்.

இந்நிலையில் தற்போது, ஷேலன்பெர்க் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குள் அவரும் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளாா்.

தனது பதவி விலகலைத் தொடர்ந்து அவர் ‘ஆஸ்திரியாவில் அதிக வாக்குகளைப் பெற்ற அரசாங்கத்தின் தலைவா் மற்றும் கட்சியின் தலைவா் ஆகிய 2 பதவிகளும் விரைவில் ஒரு கைக்குள் இணைக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதை அடுத்து, நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் காா்ல் நெஹாமா், ஆஸ்திரியா மக்கள் கட்சியின் தலைவராகவும், சான்சிலராகவும் பொறுப்பேற்கலாம் என்று கூறப்படுகின்றது.