June 17, 2025 17:37:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் இராணுவ வீரர்கள் மீண்டும் பதவியில் இணைந்துகொள்ள எதியோபியா அழைப்பு

ஆயுதக் குழுக்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் இணைந்துகொள்ளும்படி எதியோபியா கேட்டுக்கொண்டுள்ளது.

டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான கிளர்ச்சிப் படை எதியோபியாவின் தலைநகரை நோக்கி முன்னேறி வருகின்றன.

கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க எதியோபிய அரச படை போராடி வருகிறது.

பிரதமர் அபி அஹமதின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஒன்பது அரச எதிர்ப்புக் குழுக்கள் கூட்டணி அமைத்துள்ளன.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தை அரசாங்கம் தொடரும் என்று பிரதமர் அபி அஹமத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற நிலைமை அதிகரிப்பதால் தமது பிரஜைகளுக்கு வெளியேறும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.