October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்து ராணி மருத்துவமனையில் இருந்து வின்ஸ்டர் கோட்டை திரும்பினார்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

95 வயதான இரண்டாம் எலிசபெத், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக கடந்த புதன் கிழமை மருத்துவனையில் தங்கியிருந்தார் என்றும், பின்னர் வியாழக்கிழமை வின்ஸ்டர் கோட்டைக்கு அவர் திரும்பி விட்டார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை கூறியுள்ளது.

இதுதொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ராணி இரண்டாம் எலிசபெத், பொது பணிகளில் இருந்து சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு அயர்லாந்துக்கு பயணம் செல்ல திட்டமிட்டிருந்த அவர், அந்தப் பயணத்தை இரத்துசெய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.