October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரின் கொலையை தீவிரவாதச் சம்பவமாகவே பார்க்கிறோம்’: பொலிஸ்

கத்திக் குத்துக்கு இலக்கான பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமெஸின் மரணம் தீவிரவாதச் சம்பவம் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமெஸ் கத்திக் குத்துக்கு இலக்காகி, உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த தீவிரவாதச் செயலுடன் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குத் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸ்hர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்தாரி பிரிட்டிஷ் பிரஜையாக இருந்தாலும், சோமாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தடுப்புக் காவலில் உள்ள இளைஞன், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் எனக் காட்ட முயற்சிப்பதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் எசெக்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.