July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டனின் இளம் பாட்டியாக தன்னை அழைத்துக் கொள்ளும் 33 வயது பெண்!

பிரிட்டனை சேர்ந்த ஜெம்மா தனது 33 ஆவது வயதில் பாட்டியாகியுள்ளார். அவரின் 17 வயது மகள் ஒரு பெண் குழந்தையை பிரசவித்ததையடுத்து அவர் பாட்டியாகியுள்ளார்.

“முதலில் என்னை ‘பாட்டி’ என்று அழைப்பதை நான் விரும்பவில்லை – ஆனால் இப்போது நான் அதை விரும்புகிறேன்” என மூன்று பிள்ளைகளின் தாயான ஜெம்மா தெரிவிக்கின்றார்.

2004 ஆம் ஆண்டில் ஜெம்மாவுக்கு 16 வயதாக இருந்தபோது அவர் தனது முதலாவது குழந்தையை பிரசவித்துள்ளார்.

ஜெம்மாவின் மூத்த மகள் 17 வயதில் கர்ப்பமாக இருப்பதை அறிந்தபோது, ​​இவ்வளவு இளம் வயதில் அவள் ஒரு அம்மாவாக மாறுவது எவ்வளவு கடினம் என்பதை நினைத்துப் பார்த்து தாம் கவலை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகளின் குழந்தையை பேத்தி என்று மற்றவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் விளக்க வேண்டியிருந்தது. இதனை கேட்பவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும் ஜெம்மா கூறியுள்ளார்.

தனது பிள்ளைகளையும் தம்மையும் பார்ப்பவர்கள் சகோதரிகளாகவே கருதுவதாகவும் ஜெம்மா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.