![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/10/WhatsApp-Image-2021-10-05-at-15.30.25.jpeg?fit=1024%2C576&ssl=1)
பிரிட்டனில் உள்ள 1500 க்கு அதிகமான சொத்துக்களின் இரகசிய உரிமையாளர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் வெளியான ‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணங்களிலேயே இந்த தகவல்கள் கசிந்துள்ளன.
பிரிட்டனில் 4 பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான வெளிநாட்டவர்களின் இரகசிய சொத்துக்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு அரசியல்வாதிகளும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நபர்களுமே குறித்த சொத்துக்களின் இரகசிய உரிமையாளர்கள் என்று புலனாய்வு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சொத்துக்களுக்கு இரகசிய உரிமையாளர்களாக இருப்பதால், பல மில்லியன் பவுண்ட்ஸ் வரி செலுத்துவதில் இருந்து இவர்கள் தப்பியுள்ளதாக தெரியவருகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் உரிமையை உறுதிப்படுத்தும் சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.