![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/10/dddd.jpg?fit=738%2C377&ssl=1)
இத்தாலியின் மிலான் நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தனியார் விமானமொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லினேட் விமான நிலையத்தில் சார்டினியா தீவு நோக்கிப் பறந்த விமானம் இடையில், மிலான் நகரில் கட்டடமொன்றின் மீது விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ருமேனியாவின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும், அவரின் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட 8 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த விமானத்தை கோடீஸ்வர வர்த்தகரே செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இதனால் மிலான் நகரில் கட்டிடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மிலான் அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.