
(Photo: twitter/@kishida230)
ஜப்பானின் புதிய பிரதமராக “ஃபுமியோ கிஷிடா” (64) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடமாக பிரதமராக இருந்த யோஷிஹைட் சுகா பதவியிலிருந்து விலக முடிவு செய்ததையடுத்து ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலை நடத்தியது.
இத்தேர்தலில் டாரோ கோனோ, ஃபுமியோ கிஷிடா, சனாயி தகாச்சி, செய்க்கோ நோடோ ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவு அமைச்சரான கிஷிடா, மிகவும் பிரபலமான வேட்பாளரான டாரோ கோனோவை தோற்கடித்தார்.
பாராளுமன்றத்தில் எல்டிபியின் பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டு, கிஷிடாவின் பிரதமர் பதவி உறுதியானது.
பிரதமராக அவரது முதல் பணி வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தமது கட்சியை வெற்றி பெற செய்வதாகும்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தியதையடுத்து முன்னாள் பிரதமரின் அமைச்சரவை செல்வாக்கு குறைந்தது.
புதிய பிரதமர் “ஃபுமியோ கிஷிடா” தொற்றுநோய்க்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி மற்றும் வட கொரியாவில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது உள்ளிட்ட பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்.
தொற்று நோயைக் கையாள்வதற்காக “சுகாதார நெருக்கடி மேலாண்மை நிறுவனம்” நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் உய்கூர் சிறுபான்மையினருக்கு சீனாவின் நடத்தையை கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் யோசனையையும் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆதரிக்கிறார்.