February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஏவுகணையைப் பரிசோதித்தது வட கொரியா

photo: Twitter/ Ankit Panda

ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஏவுகணையை தாம் வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.

ஹவாசாங்- 8 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையை வட கொரியா நேற்று பரிசோதித்துள்ளது.

குறித்த ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகமாகச் செல்வதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் 5 வருட இராணுவ மேம்படுத்தல் திட்டத்தில் உருவாக்கப்பட்ட பிரதான ஏவுகணைகளில் ஒன்றாக ஹவாசாங்- 8 கருதப்படுகிறது.

குறித்த ஏவுகணையை வட கொரியா ‘மூலோபாய ஆயுதம்’ எனக் குறிப்பிட்டாலும், அது அணுவாயுத திறன் கொண்டதாகும்.

வட கொரியாவின் இடைவிடாத ஏவுகணை பரிசோதனையால் பிராந்தியத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.