![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/09/E_1yQBIVQA0ypzE-e1632468834650.jpg?fit=600%2C369&ssl=1)
photo: Twitter/ NAACP
ஹைட்டியில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை அமெரிக்க குதிரைப் படை அதிகாரிகள் மோசமாகக் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்க- மெக்சிகோ எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் குதிரைகள் மேல் ஏறி, அகதிகளை கடிவாள வார்களால் தாக்கும் காட்சி, உலகை கவலையடையச் செய்துள்ளது.
அமெரிக்கா பாதிக்கப்பட்ட ஹைட்டி அகதிகளை நடத்தும் விதம் குறித்து உலக அளவில் விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன.
https://twitter.com/SawyerHackett/status/1439989195871825921?s=20
அமெரிக்க அதிகாரிகளின் செயற்பாடு இருண்ட அடிமைத்துவ காலத்தை நினைவூட்டுவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் ஆற்றைக் கடக்க முயற்சிக்கும் அகதிகளைக் கட்டுப்படுத்தியதாகவும், அதிகாரிகள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதாகவும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
These images although centuries apart still seem to represent the worst of America’s capacity for humanity. @Potus if the plan is to #BuildBackBetter step 1 must be tearing down a foundation of oppressive practices. pic.twitter.com/bEkGDYl6Wg
— NAACP (@NAACP) September 21, 2021