![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/08/E8uUZ1mXMAE3-7i.jpg?fit=680%2C383&ssl=1)
ஆப்கானிஸ்தானின் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் இடம்பெற்று வரும் மோதல்களில் 20 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தாலிபான்களுக்கு பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் உள்ள போராளிகளுக்கும் இடையே யுத்த நிலை தீவிரமடைந்துள்ளது.
தாலிபான்கள் பஞ்ஷிர் பள்ளத்தாக்கைக் கைப்பற்ற மோசமாகப் போராடி வருகின்றனர்.
தலைநகர் காபூலில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்ஷிர் பிரதேசத்தில் தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தாலிபான்கள் பொதுமக்களைக் கொலை செய்யும் வீடியோ தம்மிடம் உள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.